இலங்கை வாக்களிக்கவில்லை

இலங்கையானது ரஷ்யா தொடர்பான பிரேரணையில் ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்தில் வாக்களிப்பதில் இருந்து விலகியுள்ளது.

எனினும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் யுக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்பை கண்டிக்கும் தீர்மானம், பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உள்ளிட்ட 7 நாடுகளை தவிர இந்த தீர்மானத்துக்கு 141 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன.

அதே வேளை இலங்கை, இந்தியா, சீனா,  ஈரான் மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 32 நாடுகள் வாக்களிக்கவில்லை.

இந்த தீர்மானம், யுக்ரைனில் இருந்து ரஷ்ய ராணுவத்தினரை மீள பெற வேண்டும் எனவும் யுத்தத்தை நிறுத்த வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கிறது.

அதேநேரம் வியன்னாவில் இடம்பெற்ற ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பின் கூட்டத்தில் ரஷ்யா கருத்துரைத்த போது பல பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர்.

ரஷ்யா யுக்ரைன் மீது ஆக்கிரமிப்பை ஆரம்பித்து இன்றுடன் ஒரு வருடமாகின்றது.

இந் நிலையில்,  ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பில் வெளிநடப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் பொது சபையின் வாக்கெடுப்பு என்பன இடம்பெற்றுள்ளன.