மீண்டும் தலைவரானார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

-யாழ் நிருபர்-

 

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இருவருக்குமான நியமன கடிதத்தை பிரதமர் தினேஷ் குணவர்த்தன நேற்று வியாழக்கிழமை வழங்கி வைத்துள்ளார்.