கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான அமெரிக்க பிரஜை

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த அமெரிக்க பிரஜை ஒருவர், கைத்துப்பாக்கியொன்றின் மெகசின் மற்றும் 9 தோட்டாக்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நேற்று புதன்கிழமை இரவு 8.20 மணியளவில் அமெரிக்கா செல்லும் நோக்கில் ஈ.கே 659 என்ற விமானத்தில் பயணிப்பதற்காக கட்டுநாயக்கவிற்கு வந்ததாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை விமான நிலையத்தின் பொலிஸ் நிலைய குற்றப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.