தொழிற்சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கொட்டதெனியாவ பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற தொழிற்சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர், கொட்டதெனியாவ, மத்தியதலாவ, களுஅகல பிரதேசத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் இயந்திரம் இயக்குபவராக உள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர் தொழில்நுட்பக் கோளாறினால் நிறுத்தப்பட்ட இயந்திரத்தை பரிசோதித்த போது, இயந்திரம் மீண்டும் இயங்கியதால், காயங்கள் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் மத்தியதலாவ பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர்.

இச்சம்பவம் தொடர்பாக மடியத்தலாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.