தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்
தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் மின்கட்டண அதிகரிப்பு மற்றும் வரிக்கொள்கைக்கு எதிராக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்தாக தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளது.எதிர்வரும் முதலாம் திகதி தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
துறைமுகம்,பெற்றோலியம், மின்சாரம் மற்றும் நீர்பாசனம் ஆகிய தொழிற்சங்கங்களே இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மருத்துவ, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம், பொறியியலாளர், வங்கிகளின் தொழிற்சங்க சம்மேளனங்கள் ஆதரவினை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது