சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

இந்த வருடம் ஜனவரி மாதத்தில் 157,230 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது அதிகரிப்பு என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, இதே காலத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 3906 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

ரஷ்யா, இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.