உள்ளூராட்சி தேர்தல் : தபால் மூல வாக்கெடுப்பு நிறுத்தம்

பெப்ரவரி 22, 23, 24 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடைபெறவிருந்த 2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் வாக்குகளை பதிவு செய்வது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவின் கையொப்பத்துடன் இன்று வெள்ளிக்கிழமை வெளியான அறிவிப்பில் இவ்விடயம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, உத்தியோகபூர்வ திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பில், உறுதியளித்தவாறு அரச அச்சகத்தினால் உரிய வாக்குச்சீட்டுகள் வழங்கப்படாமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது