முச்சக்கரவண்டி விபத்து : 9 மாத குழந்தை உயிரிழப்பு

முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் 9 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை குருநாகல் வாவி சுற்றுவட்ட வீதியில் யத்தம்பலாவையிலிருந்து பமுனுகெதர நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியொன்று விபத்திற்குள்ளானது.

இதன்போது காயமடைந்த முச்சக்கர சாரதி உள்ளிட்ட ஐவர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும்,  அவர்களில் 9 மாதக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி தொலைபேசி கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.