
பி.எஸ்.எம் சார்ள்ஸின் இராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பிஎஸ் எம் சார்ள்ஸ் இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வௌியாகியிருந்த நிலையில் ஜனாதிபதி செயலகம் இன்று அதனை உறுதிப்படுத்தியுள்ளது.