எரிவாயு விலை அதிகரிப்பு : உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு?

எரிவாயு விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலையை அதிகரிப்பதில்லை என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

தமது சங்க உறுப்பினர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து இந்த தீர்மானத்தை எடுத்ததாக அதன் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிப்பதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.