பருத்தித்துறையில் போராட்டத்திற்கு தயாராகும் மீனவர்கள்

பருத்தித்துறையில் போராட்டத்திற்கு தயாராகும் மீனவர்கள்

யாழ்ப்பாணம் – பாசையூரில் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்தனர்.

பருத்தித்துறை துறைமுகத்தில் இருந்து பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன முன்னாள் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்