முன்பள்ளி சிறார்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை சக்ஸஸ் முன்பள்ளி சிறார்களுக்கு, தம்பலகாமம் முஸ்லிம் வாலிபர் சங்கத்தினால் தலா இரு தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்வு தலைமை ஆசிரியை சாஷியா முபாரக் மற்றும் ததேசினி நிசாந்த், ஹுஸ்னா ஹானி அஜிமுஷானின் ஏற்பாட்டுடன் நேற்று வெள்ளிக்கிழமை தி/ஸாஹிரா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு முஸ்லிம் வாலிபர் சங்கத்தின் தலைவர் சித்திக் மௌலவி, மாவட்ட இணைப்பாளர் எம்.ஏ.எம். முக்தார், ஸாஹிரா கல்லூரியின் அதிபர் முகைஸ் மற்றும் பிரதி அதிபர் திருமதி மர்ழியா ஷக்காப், இளைஞர் சேவை அலுவலகர் அலாவுதீன் பாபு, திருகோணமலை நகர முஸ்லிம் வாலிபர் சங்க செயலாளர் ஜெயினுலாப்தீன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.