வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவிக்குட்பட்ட கல்மெடியாவ வடக்கு கிராம சேவகர் பிரிவில் அரசாங்கத்தினால் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கான இலவச அரிசி பொதி வழங்கி வைக்கப்பட்டது

குறித்த அரிசிப் பொதியானது இன்று புதன்கிழமை கல்மெடியாவ வடக்கு கிராம சேவகர் கட்டிடத்தில் இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியின் வழிகாட்டுதளுக்கிணங்க இடம் பெற்ற நிகழ்வில் தலா 10 கிலோ கிராம் எடை கொண்ட 359 குடும்பங்களுக்கான அரிசி பொதி வழங்கி வைக்கப்பட்டன.

தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் 12 கிராம சேவகர் பிரிவை உள்ளடக்கிய வகையில் மொத்தமாக 6,359 பொதிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலகப் பிரிவிலும் குறித்த அரிசி பொதிகளை பெற மொத்தமாக 88,870 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளன.

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அரசின் கொள்கை திட்டத்துக்கு அமைவாக இவ்வாறான உதவிகள் வழங்கப்படுவதாக, தம்பலகாமம் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் இதன் போது தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அதுகோரளவின் இணைப்பாளர் வாலுக மற்றும் சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சித்திக், கிராம, சமுர்த்தி பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.