
பறிபோன 7 மாத பெண் குழந்தையின் உயிர்
கட்டிலை சுற்றியிருந்த பாதுகாப்பு தடுப்பு பலகையில் சிக்கி 7 மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
இலங்கையில் ஊவா பரணகம, மஸ்பன்ன கிராமத்தில் உள்ள வீடு ஒன்றிலேயே இந்த துயரமான விபத்து இடம்பெற்றுள்ளது.
மஸ்பன்ன-வெலேக்கடே வீடு ஒன்றில் வசித்து வந்த ஹர்ஷனி மதுஷிகா என்ற 7 மாத பெண் குழந்தையே வீட்டின் கட்டிலில் இருந்து வீழ்ந்து மர பாதுகாப்பு தடுப்பு பலகையில் சிக்கி உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த குழந்தையின் தாய் வீட்டு வேலையில் ஈடுபட்டிருந்த நிலையில் குழந்தை உறங்கிக் கொண்டிருந்த படுக்கையறையை வந்து பார்த்தபோது இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குழந்தை உறங்கிய கட்டிலைச் சுற்றியிருந்த மர பாதுகாப்பு தடுப்பு பலகையில் குழந்தை மாட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு குழந்தையை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் உயிரிழந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக தியத்தலாவை ஆரம்ப வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊவாபரணகம பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
