கிழக்கு ஆளுநர் – கனேடிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு
-திருகோணமலை நிருபர்-
கிழக்கு மாகாணத்தில் சமூக அநீதிகளுக்கு ஆளான மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகள் மிகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.
கனேடிய உயர்ஸ்தானிகர் திரு எரிக் வால்ஷ் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத் குக்குமிடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார்.
திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் தங்களுடன் சகவாழ்வும் நல்லிணக்கமும் உள்ளதா என கனடாவில் வாழும் இலங்கையர்கள் அடிக்கடி கேட்பதாக உயர்ஸ்தானிகர் இங்கு சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளித்த ஆளுநர், தான் இந்தப் பதவியை ஏற்றுக்கொண்டவுடன் மேற்படி குழுவை நியமிக்க நடவடிக்கை எடுத்ததாகத் தெரிவித்தார். பின்னர் குழுவின் அறிக்கையின் பிரதியை உயர்ஸ்தானிகரிடம் ஆளுநர் வழங்கினார்.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு பிரதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இதுவரை எந்த பதிலும் அளிக்காதது வியப்பளிப்பதாகவும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் நீண்ட நேரம் கலந்துரையாடியதுடன், கனடாவில் வாழும் புலம்பெயர் இலங்கைத் தமிழ் மக்கள் கிழக்கு மாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்ள விரும்புவதாகவும் உயர்ஸ்தானிகர் இதன் போது தெரிவித்தார்.
யுத்தத்தின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகள் தொடர்பிலும் உயர்ஸ்தானிகர் ஆளுநரிடம் கேட்டறிந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயங்கரவாதத்தை அழித்ததன் பின்னர் செய்த உட்கட்டமைப்பு அபிவிருத்தியின் பலனாக இன்று வெள்ளிக்கிழமை திருகோணமலைக்கு இலகுவாக விஜயம் செய்ய முடியும் என ஆளுநர் பதிலளித்தார்.
இதன்போது, ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க உள்ளிட்ட குழுவினர்ஒன்றாக இருந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்