வாசல் கவிதை சஞ்சிகை : திருகோணமலையில் வெளியீடு

வாசல் கவிதை சஞ்சிகை திருகோணமலையில் வெளியீடு

-கிண்ணியா நிருபர்-

வாசல் வாசகர் வட்டத்தின் வெளியீடான வாசல் கவிதை சஞ்சிகை கடந்த வியாழக்கிழமை திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வுஇ வாசல் வாசகர் வட்டத்தின் தலைவர் ஊடகவியலாளர் அரசரெத்தினம் அச்சுதனின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்விற்கு, ஆசியுரையை திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தின் பிரதம குரு பிரம்மஸ்ரீ சோ.இரவிச்சந்திர குருக்கள் ஆசியுரை வழங்கவுள்ளதுடன், பிரதம விருந்தினராக உள்ளுராட்சி உதவி ஆணையாளர் சூ.பார்த்தீபன் கலந்து கொள்ளவுள்ளதுடன், சிறப்பு விருந்தினராக தமிழ்நாட்டின் நந்தவனம் சஞ்சிகையின் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன், கௌரவ விருந்தினராக மூத்த கவிஞர் அம்.கௌரிதாசன், வாசல் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் ச.திருச்செந்தூரன், கவிஞர் க. யோகானந்தம், தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வில், தமிழ்நாட்டின் நந்தவனம் சஞ்சிகையின் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன், திருகோணமலை அன்புவழிபுரத்தை சேர்ந்த நாடகக்கலைஞர் சிவநாமம் ஜெயராசா ஆகியோர் கலைக்கேசரி விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.