பிரமிட் வகை திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு மத்திய வங்கி எச்சரிக்கை

பிரமிட் வகை திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு மத்திய வங்கி எச்சரிக்கை

நாட்டில் செயற்படும் பிரமிட் வகையிலான தடைசெய்யப்பட்ட மூன்று திட்டங்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு இலங்கை மத்திய வங்கி சீபிஎஸ்எல் (CBSL) சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, பாஸ்ட் 3சேக்கிள் இன்டர்நெஸ்னல் (பி.வி.டி) எல்.டி.டி (எஃப்3சீ), ஸ்போர்ட்ஸ் சயின் அப், ஸ்போர்ட்ஸ் சயின் சட்.எஸ் சொசைட்டி ஸ்ரீ லங்கா மற்றும் ஒன்மக்ஸ் ட் Fast 3Cycle International (Pvt) Ltd (F3C), Sport Chain App, Sports Chain ZS Society Sri Lanka மற்றும் OnmaxDT ஆகிய நிறுவனங்கள் வங்கிச் சட்டத்தின் 83ஊ இன் விதிகளை மீறியுள்ளனவா என்பதைக் கண்டறிய இலங்கை மத்திய வங்கி விசாரணைகளை மேற்கொண்டது.

நடத்தப்பட்ட பரீட்சை தொடர்பாக, சம்பந்தப்பட்ட மூன்று நிறுவனங்கள் மற்றும் அந்த நிறுவனங்களின் இயக்குநர்கள், நிறுவுனர்கள் மற்றும் ஊக்குவிப்பாளர்கள் மேற்படி சட்டத்தின் விதிகளுக்கு மாறாக தடைசெய்யப்பட்ட திட்டங்களை செயற்படுத்தியதாக இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்