முச்சக்கரவண்டி விபத்து : 5 வயது சிறுமி உயிரிழப்பு
கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியின் இங்கிரியாவத்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டியொன்றும் வேன் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதுண்டதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
முச்சக்கர வண்டியில் பயணித்த சாரதி, கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரின் புதல்வி ஆகிய மூவரும் காயமடைந்த நிலையில் தெலிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கரவநெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அனுமதிக்கப்பட்ட மூவரில் ஐந்து வயது சிறுமி கரவநெல்ல வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.