
கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிகள் கைது
பாணந்துறை தெற்கு பகுதியில் பெண்ணொருவரை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லொறியில் பயணித்த குறித்த நபர்கள் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணை வீட்டில் இறக்கி விடுவதாக தெரிவித்து வற்புறுத்தி லொறியில் ஏற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த முறைப்பாட்டின்படி, குறித்த நபர்கள் அவளை ஒரு கைவிடப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று அவளின் வாயை கட்டி வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 3ஆம் திகதி இரவு பாணந்துறை நகரில் உள்ள கடையொன்றில் பணிபுரிந்துவிட்டு வீடு திரும்பும் வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட பெண் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
100 இற்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பாணந்துறை தெற்கு பொலிஸாரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் 45, 24 மற்றும் 23 வயதுடைய பாணந்துறை, அருக்கொட மற்றும் எகொடஉயன பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
</ul
