1,200 கிலோ இஞ்சியை கடல் மார்க்கமாக கொண்டுவந்தவர்கள் கைது

இந்தியாவில் இருந்து இஞ்சி கடத்தி வரப்பட்ட குற்றச்சாட்டில் கல்பிட்டி இலந்தடியா மற்றும் மாம்புரிய கடற்கரையில் மூன்று மீன்பிடி படகுகளையும் சந்தேக நபர்களையும் நுரைச்சோலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து வரி செலுத்தாமல் கடத்தி வரப்பட்ட 1,200 கிலோ எடையுள்ள இஞ்சி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று படகுகளும் இலந்தடியா பிரதேசத்தில் வசிக்கும் சந்தேகத்திற்கிடமான மீனவர்களுடன் சேர்த்து கைது செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் இஞ்சி விலை அதிகம் என்பதாலேயே இந்தியாவில் இருந்து இரகசியமாககொண்டு வந்துள்ளதாகவும் சந்தேக நபர்கள் மீதான மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்