இலங்கை கிரிக்கெட் அணி நாடு திரும்பியது

ICC இருபதுக்கு 20 உலக கிண்ணம் தொடரில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியா சென்ற இலங்கை குழாம் இன்று மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளது.

இன்று திங்கட்கிழமை காலை 8.27க்கு ஈ.கே – 650 என்ற விமானத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்ததாக விமான நிலையத்திற்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.

T20 WORLD CUP தொடரில் கலந்து கொண்ட இலங்கை அணி இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த நிலையில் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தது.

இதனையடுத்து, இலங்கை கிரிக்கட்  அணி இன்று நாடு திரும்பியுள்ளது.