சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட பொறுப்பதிகாரி பதவியேற்றார்!

-யாழ் நிருபர்-

யாழ்.சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்ட தமிழ் பொறுப்பதிகாரியான சிவானந்தன் நிதர்சன் இன்று திங்கட்கிழமை தனது பதவியை உத்தியோகபூர்வமாக கடமையுற்றுள்ளார்.

அவர் ஆரம்பத்தில் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு பொலிஸ் நிலையத்தில் மாலை அணிவித்து , பொன்னாடை போர்த்தி வரவேற்பளிக்கப்பட்டது.

பின்னர் அவர் உத்தியோகபூர்வ ஆவணத்தில் அறிக்கையை எழுதி, தனது பணிகளை உத்தியோகபூராவமாக பொறுப்பேற்றார்.

அதனைத் தொடர்ந்து சமூக மட்ட அமைப்பினர், மதகுருமார் உள்ளிட்டோர் நினைவுச் சின்னங்களல வழங்கி அவரை கௌரவித்தனர்.