மாமாவை கொலை செய்த மருமகன்
மாதம்பே, செம்புகட்டிய பிரதேசத்தில் மருமகன் மாமாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நரசிம்ம கேசர பண்டாரநாயக்க சாம்சன் ஜயவீர (வயது – 56) என்கிற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சகோதரியின் மகனே இந்த கொலையை செய்துள்ளதாகவும், சந்தேக நபரும் இறந்தவரின் வீட்டிற்கு அருகில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பழைய தகராறு காரணமாக உயிரிழந்தவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் சந்தேக நபர் வாளால் வெட்டி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்