கடலில் மீன்பிடிக்க சென்ற குடும்பஸ்தர்: வள்ளம் தாண்டு பலி
-மன்னார் நிருபர்-
மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் இருந்து நேற்று திங்கட்கிழமை மாலை படகில் கடற்தொழிலுக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் வள்ளம் தண்டதில் கடலில் விழுந்து உயிரிழந்தார்.
பள்ளிமுனை மேற்கு பகுதியைச் சேர்ந்த எஸ்.ஏ.ஜான்சன் (வயது-62) என்ற குடும்பஸ்தரே இதன் போது உயிர் இழந்துள்ளார்.
உயிரிழந்தவர் உள்ளடங்களாக மேலும் சில மீனவர்கள் படகில் தொழிலுக்குச் சென்ற போது மாலை 4 மணியளவில் திடீரென கடும் காற்று மற்றும் மழை பெய்துள்ளது.
இதன் போது குறித்த மீனவர்கள் சென்ற படகு கடலில் மூழ்கிய நிலையில் ஏனையவர்கள் தப்பிய போதும் குறித்த குடும்பஸ்தரான மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மன்னார் வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்