உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி அடுத்த வாரம் தொடங்கும்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாக்கு சீட்டுக்களில் உள்ள அச்சுப் பிழைகளின் துல்லியம் மற்றும் அதில் உள்ள விவரங்களைத் திருத்தம் செய்தபின், தேர்தல் ஆணையத்தால் வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி தொடங்கும் என, திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கண்காணிக்க சுமார் 7,000 சுயாதீன கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.