சுவிஸ் நாட்டு தேர்தலில் களமிறங்கும் இலங்கைத் தமிழர்

சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழர் ஒருவர் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவிஸில் வசிக்கும் ஈழத்தமிழர்களின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு குரல் கொடுக்கும் பிரதான கட்சியான பசுமை கட்சி சார்பாக சுவிட்சர்லாந்து ஆர்காவ் மானிலம் சார்பாக யாழ் வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்ட செல்வதயாளன் ரிசோத் என்ற இளைஞன் போட்டியிடுகின்றார்.

 

மேலும் இம்முறை சுவிஸ் நாடாளுமன்ற தேர்தலிற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பிரதான கட்சிகள் சார்பாக ஈழத்தமிழர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்