இலங்கை வரலாற்றில் முதன்முதலாக அதிகளவான அரச ஊழியர்கள் நாளை ஓய்வு

30,000 இற்கும் அதிகமான அரச ஊழியர்கள் நாளை வெள்ளிக்கிழமை ஓய்வு பெறவுள்ள நிலையில்இ அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பெருமளவிலானவர்கள் ஒரேயடியாக ஓய்வு பெற்றாலும் அரச சேவையில் வீழ்ச்சி ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முந்தைய அரசு அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்திய நிலையில், தற்போதைய அரசு வயது வரம்பை மீண்டும் 60 ஆக குறைத்தது.

அங்கு கடந்த ஆண்டு அதிகளவான அரச ஊழியர்கள் ஓய்வு பெறாத நிலையில், அவர்களையும் உள்ளடக்கி வரலாற்றில் அதிகளவான அரச ஊழியர்கள் நாளை ஓய்வு பெற உள்ளனர்.