இந்திய வீரர் விராட் கோஹ்லியின் புதிய சாதனை
இந்திய வீரர் விராட் கோஹ்லி இந்திய ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை புதிய சாதனையை பதிவு செய்துள்ளார்.
நேற்று முடிவடைந்த இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
நேற்று இந்திய ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் எதிரணி அணிக்கு மிகப்பெரிய இலக்காக அமைந்ததால் 50 ஓவர்கள் முடிவில் ஒரு அணி எடுத்த ரன்களின் எண்ணிக்கை 390 ஆக பதிவானது.
இதன்போது விராட் கோஹ்லி 110 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 166 ரன்கள் குவித்தார்.
இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை நேற்று விராட் கோஹ்லி படைத்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கரை முறியடித்து சாதனை படைத்துள்ளார்.
அதன்படி, இந்திய ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 21 சதங்கள் அடித்த வீரராக கோஹ்லியின் சதம் பதிவானது.
அவருக்கு அடுத்தபடியாக 20 சதங்கள் அடித்துள்ள சச்சின் மற்றும் மூன்றாவது இடத்தில் தற்போதைய இந்திய ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் உள்ளனர்.
தோனி மற்றும் யுவராஜ் சிங் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளனர்.
விராட் கோலி நேற்று 13 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் சதம் அடித்தமை குறிப்பிட்தக்கது.