அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக எஸ்.ஜெகராஜன் நியமனம்
-அம்பாறை நிருபர்-
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவை தரம் 1 அதிகாரியான காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுச்சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைவாக பொது நிர்வாக அமைச்சு இந்நியமனத்தை வழங்கியுள்ளது.
முன்பு மேலதிக அரசாங்க அதிபராக இருந்த வேதநாயகம் ஜெகதீசன் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிக செயலாளராக (அபிவிருத்தி) பதவி உயர்வு பெற்று செல்கின்ற காரணத்தினால் இந் நியமனம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது
2007 இல் இலங்கை நிருவாகசேவையில் இணைந்து கொண்ட காரைதீவைச் சிவ.ஜெகராஜன் காரைதீவு பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராகவும் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றி வந்த வேளையிலே கல்முனை வடக்கு உப பிரதேச செயலாளாரகவும் கடமையாற்றி இருந்தார்.
2013 இல் திருக்கோவில் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டு அங்கு சிறப்பான பணியாற்றி வந்த வேளையில் 2019 மீண்டும் காரைதீவுக்கு நியமிக்கப்பட்டார்.
ஐந்து வருட கால சேவையை பூர்த்தி செய்து தற்பொழுது அவர் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
இவரது இடத்திற்கு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி சஜிந்ரன் இராகுலநாயகி பதில் பிரதேச நியமிக்கப்பட்டுள்ளார்.
இதே வேளை போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிக செயலாளராக வி. ஜெகதீசன் பதவியேற்றார்
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஸன் பதவியுயர்வு பெற்று போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிக செயலாளராக இன்று(05)தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
அம்பாறை மாவட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபராக வி.ஜெகதீஸன் மூவின மக்களுக்காகவும் சமமாக பணியாற்றிய உயர் அதிகாரி இவராவார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்