
வெடி குண்டுகள் கண்டுபிடிப்பு
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – வெற்றிலைக்கேணி, ஜே/432 கிராம சேவையாளர் பிரிவில் இன்று திங்கட்கிழமை காலை 06.30 மணியளவில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
குறித்த பகுதியில் தடாகம் ஒன்றிற்கு அருகில் வெடிபொருட்கள் இருப்பதை மீனவர் ஒருவர் அவதானித்த நிலையில் வெற்றிலைக்கேணி இராணுவ அதிகாரிகளுக்குத் இதனை தெரியப்படுத்தினார்.
அங்கு 60 mm ரக மோட்டார் குண்டுகள் 10 கண்டுபிடிக்கப்பட்டன.
அவற்றினை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
