அதிபர் வெற்றிடங்கள் : நிர்வாக நடவடிக்கைகள் பாதிப்பு

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் சுமார் 400 அதிபர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக மேல் மாகாண ஆளுநர் ரொசான் குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பாடசாலைகள் பதில் அதிபர்களின் ஊடாக நிர்வகிக்கப்பட்டு வருவதாகவும், இந்த பிரச்சினை காரணமாக நிர்வாக நடவடிக்கைகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  மேல் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தென் மாகாணத்தில் நிலவிய மழையுடனான வானிலை காரணமாக மூடப்பட்ட பல கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளின் நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்