முச்சக்கரவண்டி கட்டணங்கள் அதிகரிப்பு?
பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் பெற்றோல் விலை அதிகரிப்பு காரணமாக முச்சக்கர வண்டி கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வதில்லை என்ற தீர்மானத்தை எடுத்துள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் மூன்று முறை பெற்றோல் விலை குறைக்கப்பட்டது. எனினும் முச்சக்கரவண்டி கட்டணம் குறைக்கப்படவில்லை.
எனவே, நேற்று புதன்கிழமை நள்ளிரவு முதல் ஒக்டென் 92 பெற்றோல் லீற்றரொன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட போதிலும், கட்டணத்தில் எந்த திருத்தமும் செய்வதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
எனவே, அரசாங்கம் எரிபொருள் விலையை அதிகரிப்பதைப் போன்று எரிபொருள் ஒதுக்கீட்டையும் அதிகரிக்குமாறும், எரிபொருள் அனுமதிப்பத்திர முறையில் அதனையும் உள்ளடக்குமாறும் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.