சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென்மேற்கு சீனாவின் ஜிசாங் தன்னாட்சிப் பகுதியில் உள்ள நகு நகரின், நைமா கவுண்டியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இன்று சனிக்கிழமை காலை 8:46 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கம் 8 கி.மீ ஆழத்தில் ரிச்டர் அளவில் 5.9 ஆக பதிவானதாக தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.

34.14 பாகை வடக்கு அட்சரேகை மற்றும் 86.36 பாகை கிழக்கு தீர்க்கரேகையில் நிலநடுக்கம் கண்காணிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்