மீண்டும் மின்வெட்டிற்கு அனுமதி கோரிய இ.மி.ச : எச்சரித்துள்ள இ.பொ.ப ஆணைக்குழு

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நடைபெறவுள்ள காலப்பகுதியில் எந்தவொரு மின்வெட்டுக்கும் அனுமதி வழங்கப் போவதில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபைக்கு (CEB) அனுப்பியுள்ள கடிதத்தில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை மின்சாரத் தடையை அமுல்படுத்துமாறு இலங்கை மின்சார சபையினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, 2023 ஜனவரி 26 முதல் 2023 பெப்ரவரி 17 ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப் போவதில்லை என தெரிவித்துள்ளது.

2023 பெப்ரவரி 17ஆம் திகதி வரை தடையில்லா மின்சாரம் வழங்குமாறும், குறித்த காலப்பகுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு,  இலங்கை மின்சார சபைக்கு  அறிவுறுத்தியுள்ளது.