Last updated on April 28th, 2023 at 05:12 pm

பரீட்சை காலத்தில் மின்வெட்டு : இரண்டு அதிகாரிகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

பரீட்சை காலத்தில் மின்வெட்டு : இரண்டு அதிகாரிகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோர் இன்று புதன்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

உயர்தரப் பரீட்சை காலத்தில் மின்வெட்டைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காததே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

 

நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரியை பெற்றுக்கொள்வதுடன், தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பில் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை நிலக்கரி நிறுவன அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

ஜனவரி மாதம் திட்டமிடப்பட்ட 7 நிலக்கரி கப்பல்களில் 5ல் இதுவரை நிலக்கரி கிடைத்துள்ளது.

மேலும், இந்த மாதத்திற்குள் மேலும் 2 நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளது.

இதன்படி, இந்தக் காலப்பகுதியில் 10 நிலக்கரி கப்பல்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும், முழுத் தேவைக்காக 33 நிலக்கரி கப்பல்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், பிப்ரவரியில் 7 நிலக்கரி கப்பல்களும், மார்ச்சில் 7 கப்பல்களும், ஏப்ரலில் 7 கப்பல்களும் பெற திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்குத் தேவையான பணத்தைப் பெற்றுத் தருமாறு இரண்டு அரச வங்கிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.