
சம்மாந்துறையில் ஆளுநரினால் நிரந்தர நியமனம் வழங்கி வைப்பு
அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிக/சாதாரண/மாற்று/ஒப்பந்த மற்றும் தினசரி அடிப்படையில் சேவையாற்றிய ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குதல் நிகழ்வு நேற்று புதன் கிழமை சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பொத்துவில், திருக்கோயில், ஆலையடிவேம்பு, அம்பாறை, நிந்தவூர், காரைதீவு, நாவிதன்வெளி, இறக்காமம், மஹாஓயா, நாமல்ஓயா, தமண, லஹுகல, தெஹியத்தகண்டி, பதியத்தலாவ, உஹன, போன்ற பிரதேச சபை, மாநகர சபை போன்றவற்றில் கடமையாற்றிய 419 பேருக்கான நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய தலைவர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவர் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி. வீரசிங்க, தேசிய காங்கிரஸின் தேசிய தலைவர் முன்னாள் அமைச்சர் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா, திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க, திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் ஆணையாளர் முதலமைச்சின் செயலாளர் என். மணிவண்ணன், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எஸ்.எம். பி. ரத்நாயக்க, முன்னாள் கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் ஏ.மன்சூர், திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம் முஷாரப் அவர்களின் சம்மாந்துறை தொகுதி இணைப்பாளர் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ.சி.எம். சஹில், கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பொத்துவில், திருக்கோயில், ஆலையடிவேம்பு, அம்பாறை, நிந்தவூர், காரைதீவு, நாவிதன்வெளி, இறக்காமம், மஹாஓயா, நாமல்ஓயா, தமண, லஹுகல, தெஹியத்தகண்டி, பதியத்தலாவ, உஹன, போன்ற பிரதேச சபை, மாநகர சபை ஆகியவற்றின் தலைவர்கள், செயலாளர் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்