Last updated on January 4th, 2023 at 06:52 am

ஜனவரி 5 ஆம் திகதி பாராளுமன்றம் கூடுகின்றது

ஜனவரி 5 ஆம் திகதி பாராளுமன்றம் கூடுகின்றது

எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பிலான தெரிவுக்குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், முன்னதாக ஜனவரி மாதம் 17 ஆம் திகதி வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

புனர்வாழ்வு பணியக சட்டமூலம் மற்றும் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள வளாகங்களை மீள பெறுவதற்கான சட்டமூலங்களின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதமும் வாக்கெடுப்பும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க