O/L பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தே.அ.அட்டை தகவல்களை உறுதிப்படுத்துவது தொடர்பான அறிவிப்பு!

இம்முறை கல்வி பொது தராதர சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தமது தேசிய அடையாள அட்டை தகவல்கள் தொடர்பான உறுதிப்படுத்தல் கடிதங்களை எதிர்வரும் சனிக்கிழமை பெற்றுக்கொள்வதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 15 ஆம் திகதி சனிக்கிழமை குறித்த கடிதங்களைக் காலை 8.30 முதல் மதியம் 12.30 வரை பெற்றுக்கொள்ள முடியும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, தேசிய அடையாள அட்டை தகவல்களை உறுதிப்படுத்துவதற்கான கடிதங்களை ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் , மற்றும் காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள கிளை அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும்.

குறித்த கடிதங்களை பெற்றக்கொள்ளுவதற்கான அவசியம் உள்ள மாணவர்கள் அதிபர் அல்லது கிராம உத்தியோகத்தரினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களுடன் நேரில் வருகைதர வேண்டும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மின்னல்24 இணைய வானொலி கேட்க அழுத்துங்கள்