
ஓரினச்சேர்க்கையாளர்களுடன் உடலுறவு கொண்டவர்கள் நாடாளுமன்றில் இருக்கிறார்கள்
ஓரினச்சேர்க்கையாளர்களுடன் உடலுறவு கொண்டவர்கள் இன்று பாராளுமன்றத்தில் இருப்பதாக அமெரிக்காவில் வசித்து வரும் இலங்கையர் அமில சம்பத் என்பவர் தெரிவித்துள்ளார்.
தனியார் இணையத்தளம் ஒன்றில் இடம்பெற்ற ஒரு விவாதத்தில் கலந்து கொண்ட அவர், எந்த நேரத்திலும் 10%-12% ஓரினச்சேர்க்கையாளர்கள் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சமூகத்தில் உரிமைகள் இருக்க வேண்டும், சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்படக்கூடாது என தெரிவித்தார்.
இலங்கையில் முன்னர் ஓரினச்சேர்க்கை என்பது ஒரு மன நோயாக மட்டுமே பார்க்கப்பட்டது. இலங்கையில் ஓரினச்சேர்க்கை சட்டபூர்வமாக்கினால் நல்லது என்று நினைக்கிறேன். அது இப்போதைக்கு நடக்காததொன்று, ஆனால் அதை விட்டு ஓரினச்சேர்க்கை என்பதை வாய்விட்டுக் கூற வழிவகுக்க வேண்டும்.
நான் களனி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை முடித்ததும் எனக்கு புலமைப்பரிசில் ஒன்று கிடைத்தது. அதனூடாக நான் அமெரிக்கா சென்றேன்,
அங்கு நான் ஓரினச்சேர்க்கை குறித்து ஆய்வுகளின் ஈடுபட்டு அந்த உரிமைக்காக கதைத்தேன். அதற்குப் பின்னர் நான் ஓரினச்சேர்க்கை குறித்து தீர்மானித்தேன் அமெரிக்காவில் குடியிருப்பது தான் சரி என்று.
நான் இலங்கை அரசியலை எப்போதும் ஓரினச்சேர்க்கைக்காக பாவிக்கவில்லை. ஆனால் நான் ஓரினச்சேர்க்கையாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சில விருந்துபசாரங்களை ஏற்பாடு செய்தேன். அதற்கு மறைந்த அமைச்சர் மங்கள சமரவீரவும் பங்குபற்றியிருந்தார்.
பாராளுமன்றில் ஏராளமான ஓரினச்சேர்க்கையாளர்கள் இருக்கிறார்கள். நான் பெயர், ஊர்களை கூற மாட்டேன். அவர்கள் என்னுடன் எந்தத் தொடர்பையும் பேணியதில்லை, என்னுடைய நண்பர்கள் அவர்களுடன் பாலியல் ரீதியாக தொடர்புகளை கொண்டவர்கள் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.
ஆனால், இன்னும் ஆண் நண்பர்களுடன் தொடர்புடைய ஏராளமான பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் இருக்கிறார்கள். பெயர் ஊர் என்பவற்றை நான் கூறுவதில்லை, தெரிந்தவர்களுக்கு தெரியும்.
இதில் திருமணமானவர்களும் இருக்கிறார்கள், அவர்கள் உலகிற்கு காட்டுவதற்கு குடும்பமாக வாழ்கிறார்கள்.
இது தொடர்பில் நான் பேச காரணம் இலங்கை வாழ் ஓரினச்சேர்க்கையாளர்கள் தான். அது தவிர எனக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, என்று தெரிவித்தார்.
