
32 வயது பெண்ணொருவர் வெட்டிக்கொலை
பொல்பித்திகம, தல்பத்வெவ பிரதேசத்தில் பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் தனது குழந்தையை பாடசாலையில் விட்டுவிட்டு துவிச்சக்கரவண்டியில் வீடு திரும்பும் போதே இவ்வாறு தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் தனிப்பட்ட தகராறு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், அவர் கணவனால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பொல்பித்திகம வடுபொலயகம பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய குறித்த பெண்ணின் சடலம் பொல்பித்திகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரைப் பிடிக்க பொல்பித்திகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.