உள்ளூர் துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் ஒருவர் கைது

-கிளிநொச்சி நிருபர்-

உள்ளூர் துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் நேற்று திங்கட்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு – அம்பகாமம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு உள்ளூர் இடியன் துப்பாக்கிகளும், ரவைகள் மற்றும் ஈயம் என்பனவற்றுடன் சந்தேக நபர் ஒருவர் கிளிநொச்சி மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.