
வரிசையில் காத்திருந்து QR குறியீட்டினை பயன்படுத்தி எரிபொருள் நிரப்பிய எம்.பி
-நுவரெலியா நிருபர்-
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இன்று ஹட்டன் பகுதியில் எரிபொருள் வரிசையில் 30 நிமிடம் காத்திருந்து QR குறியீட்டினை பயன்படுத்தி எரிபொருள் நிரப்பியதாக பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார்.
மேலும் மக்கள் தேவையற்ற வகையில் எரிபொருளுக்காக வரிசைகளில் நிற்க வேண்டாம் மேலும் அரசாங்கம் அறிவிக்கும் நடைமுறைகளை சரிவர பின்பற்ற வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார்.
