வதிரி பூவற்கரைப் பிள்ளையார் ஆலய மணவாலக்கோல உற்சவம்

-யாழ் நிருபர்-

வதிரி பூவற்கரைப் பிள்ளையார் ஆலய மணவாலக் கோல உற்சவ 1008 சங்காபிசேகம் இன்று புதன்கிழமை காலை 6 ஆரம்பமாகி விநாயக வழிபாடு புண்ணியவாசனம் விசேடதிரவியகோமம் தீபாரதனை வேததோத்திர திருமுறை பாராணயம் ஆசிர்வாதம் கும்பபிரதட்சணம் என்பன இடம்பெற்றதனை தொடர்ந்து காலை 11  மணியளவில் விசேட அபிசேகம் இடம் பெற்று வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்றன.

அதனை தொடர்ந்து சுவாமி உள்வீதி உலா வந்தார்.

இம்மணவாளக்கோல உற்சவம் ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ கு . கோகுலன் குருக்கள் தலமையில் இடம் பெற்றது.

இவ் மணவாளக்கோல உற்சவத்தில் பிரதேசத்தை சேர்ந்த அடியார்கள் கலந்து கொண்டனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்