
லண்டன் ஓ.டி.எச்.எம் நிறுவன பிரதானி மற்றும் ஸ்ரீலங்கா மெட்டோபொலிடன் கல்லூரி தலைவர் சந்திப்பு
லண்டன் ஓர்கனிசேஷன் ஃபோர் டூரிஷம் அன்ட் கொஸ்பிடல் மனேஜ்மென்ட் (Organization for Tourism and Hospitality Management) நிறுவன பிரதானி அன்ரிவ் றேனி மற்றும் ஸ்ரீலங்கா மெட்ரோபொலிடன் நிறுவன ஸ்தாபக தலைவர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இடையிலான கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை கொழுப்பு மெட்ரோபொலிடன் கல்லூரியின் இடம்பெற்றது.
மெட்ரோ பொலிடன் கல்லூரி மற்றும் லண்டன் ஓ.டி.எச்.எம் (OTHM) கல்வி நிறுவனத்திற்கும் இடையிலான 15 வருட உறவினை நியாபகப்படுத்தி நட்பு ரீதயாக இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இலங்கையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற மிகச் சிறப்பாக இயங்கிவரும் கல்லூரியின் ஸ்தாப தலைவரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி எனவும் லண்டன் ஓ.டி.எச்.எம் நிறுவன பிரதானி தெரிவித்தார்.
இதன்போது லண்டன் ஓ.டி.எச்.எம் நிறுவன பிரதானிக்கு மெட்ரோபொலிடன் கல்லூரி தலைவரால் நினைவுச்சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
இலங்கையில் உயர்கல்வி, உயர் பட்டப்படிப்புக்களை வழங்கிவருகின்ற தனியார் கல்வி நிறுவனங்களில் மெட்ரோபொவிடன் கல்லூரி முன்னிலையில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்