மாலைநேர உணவகங்கள் இரண்டிற்கு எதிராக சட்ட நடவடிக்கை
-மூதூர் நிருபர்-
மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள தோப்பூர் பிரதேசத்திலுள்ள மாலை நேரக் கடைகள் நேற்று திங்கட்கிழமை மாலை திடிர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.
இதன் போது உணவு பாதுகாப்பு பல ஒன்று கூடல்கள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டு , கள பரிசோதனைகள் மூலம் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டு, அதனை திருத்துவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் குறைபாடுள் நிவர்த்தி செய்யாத 2 மாலை நேர சிற்றூண்டி நிலையங்களுக்கு ,உணவு பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் வகையில் உணவு கையாண்டமைக்காக எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மூதூர் சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகள் ஐ.எம்.றினூஸ் தெரிவித்தார்.
மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி ஹில்மி முஹைதீன் அவர்களின் ஆலோசனைக்கமைய மூதூர் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இவ் சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்