யாழில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு 11:30 மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது
கடற்படையினர் மற்றும் மருதங்கேணி பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று இரவு ஓர் விசேட சுற்றிவளைப்பு ஒன்று மாமுனை பகுதி முழுவதும் மேற்கொள்ள பட்டது
இச் சுற்றி வளைப்பில் 38 பொதிகள் அடங்கிய 71.400 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரும் தப்பி சென்றுள்ளார், மீட்கப்பட்ட கேரளா கஞ்சா மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்