
கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்ற கிளிநொச்சி மாணவன்
கபொத உயர்தரம் 2025ல் அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் கிளிநொச்சியைச் சேர்ந்த தெய்வேந்திரன் திருக்குமரன் முதலாமிடம் பெற்றுள்ளார்.
குறித்த மாணவன் 2.9400 வெட்டுப்புள்ளிகளுடன் அகில இலங்கை ரீதியாக முதலிடம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
சாதனை படைத்த மாணவன் இன்றைய தினம் ஊடகங்களுக்கு தனது சாதனை தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், விருப்பப்பட்டு கல்வி கற்றால் சாதிப்பது இலகுவான விடயம் என கூறியுள்ளார்.
