உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டது

உள்ளூராட்சி சபைத் தேர்தல் மார்ச் 09ஆம் திகதி நடத்தப்படாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, புதிய திகதிகள் எதிர்வரும் மார்ச் 3ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு இன்று வெள்ளிக்கிழமை அறிவித்தது.

அதன்படி, ஏற்கனவே திட்டமிட்டவாறு எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் நடைபெறாது என தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளது.