முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கென்னடி படுகொலை தொடர்பான 13,000 ஆவணங்கள் பகிரங்கம்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன் எப்.கென்னடியின் படுகொலை தொடர்பான 13,173 ஆவணங்களை பகிரங்கப்படுத்த வெள்ளை மாளிகை நடவடிக்கை எடுத்துள்ளது.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதியின் படுகொலை தொடர்பான மேலும் 515 ஆவணங்களை பகிரங்கப்படுத்தாமல் இருக்க தற்போதைய ஜனாதிபதி ஜோ பிடன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஜான் எப்.கென்னடி 22  நவம்பர்  1963 அன்று படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.