கடலாமையை கொன்று இறைச்சியாக்கியவர் கைது

-யாழ் நிருபர்-

அனுமதி பத்திரம் இன்றி சட்டவிரோதமாக கடல் ஆமையை பிடித்து கொலை செய்து இறைச்சியாக்கி உடைமையில் வைத்திருந்த குற்றத்திற்காக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

ஊர்காவல்துறை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த கரம்பன் பகுதியில் வசிக்கும் 52 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.